top of page

இவன்



பூமகளின் முட்பாதை பூப்பாதை இரண்டையும் ஒன்றாய்த் தழுவும் நீண்ட பாதங்கள்

வணக்கத்தையும் சமர்ப்பணமாக்கும் விதத்தில் பணிந்து நிற்கும் கைகள்

ஆற்றங்கரை நாணல் ஒத்த மெல்லிய தேகம்

காற்றுக்குத் தலைவணங்கி உடல் வளைக்கும் அதே நாணல் போல

கடவுளிடம் உருகிப் பனிக்கும் கண்களுடன் சேர்ந்து வளையும் முதுகு

இவன் உயிருடல் காற்றுடன் விண்வெளி ஓடிவிடாமல் இருக்கக்

கூடாரம் போல் மூடிக் காக்கும் மேலுடை

நானும் துணையிருப்பேன் என்று அரையில் நிற்கும் ஒற்றைத் துணி

இவற்றுடன் இருப்பவை கண்ணுக்குத் தெரியாத கடல் தாண்டி நிற்கும் என் இதயமும், மனதும்


•⁠ ⁠சிட்டிசன் கே கே

Comments


 copyright @ Citizen KK  

bottom of page